நீங்கள் இல்லாத சமயம்
உங்கள் கணினியை யாராவது பாவிக்க முயன்றால்,
அவரை எச்சரிக்க விரும்புகிறீர்களா?
-சக்தி
இந்த பதிவு எனது ஆசிரியர் சக்தி அவர்களுக்கு சொந்தமானது அவர் எழுதிய பதிவை நான் பகிர்ந்து கொள்கிறேன் ...
கணினியில் பாஸ்வேட் போட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும்,சிலர் பாஸ்வேட்டை தெரிந்து கொண்டு,நாகரிகம் தெரியாது கணினியை பாவிக்க முயற்சிப்பார்கள். அவர்களை நாம் எச்சரிக்கை
செய்யலாம்.
கணினி Power
Button மூலம்
தொடங்கப்பட்டதும்,Starting
Windows என வந்ததும், logon Screen வரும். Logon with Password வருவதற்கு வருவதற்கு முன்,
ஒரு செய்தியை, நாம் நீல நிற Welcome
Screen இல் கொண்டு வர
முடியும்.
அதாவது உங்கள் கணினியை பாவிக்க யாராவது முயற்சித்தால், அவர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தியைக்
கொடுக்கலாம்.
உதாரணமாக- என் கணினி யாரும் தொடாதீர்கள்,எதையும் மாற்றி அமைக்காதீர்கள்-தனிப்பட்ட விபரங்களைப் படிக்காதீர்கள்-
போன்றவற்றை சொல்ல விரும்பினால் என்ன செய்யலாம்?
முதலில் start-run-regedit என டைப் செய்யவும் பிறகு வரும் திரையில் கிழ் உள்ள படி செல்லவும்
Start-Run-Regedit-Hkey
Local Machine-Software-Microsoft-Windowsnt-Currentversion-Winlogon
–Legalnoticecaption
winlogon
ஐ கிளிக்
செய்ததும்,வலது பக்கத்தில் legalNoticecaption என்பது இருக்கும். legalNoticecaption என்பதில் double click செய்து,வரும் விண்டோவில் ,
welcome screen for all users என எழுதி,OK
கொடுக்கவும்.
பின்னர் அதற்குக் கீழே உள்ள legalNoticeText என்பதில் double
click செய்து வரும்
சாளரத்தில்,
விரும்பிய
செய்தியை எழுதவும். தமிழில் எழுதுவதானால் வேறொரு இடத்தில் எழுதி copy and paste செய்து OK. கொடுக்கவும்.அவ்வளவுதான்.
ரெஜிஸ்றியை மூடி,கணினியை மீள் தொடக்கவும். இப்போது நீங்கள் எழுதிய செய்தி Welcome Screen இன் இடது மேல் மூலையில் காண்பிக்கும்.
கணினியைப் பாவிக்க விரும்புவோர் ,அங்கே எழுதிய
குறிப்பை ஏற்றுக் கொண்டு OK
கொடுத்து
கணினியை Login
செய்து
பாவிக்கலாம்.
தவறாக register
editor ல் மாற்றம்
செய்தால் பிரச்சனைகள் வரலாம்.அதனால் மாற்றம் செய்யு முன்னர், backup எடுத்து வைத்துக் கொள்வது பாதுகாப்பானது.
start-run-regedit-file-export whole registry எங்காவது save செய்து கொள்ளவும்..
start-run-regedit-file-export whole registry எங்காவது save செய்து கொள்ளவும்..
No comments:
Post a Comment
உங்களுக்கு இந்த பதிவில் குறைகள் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள் நிறைகள் இருந்தால் வெளிய சொல்லுங்கள் !!!